தென்காசி

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தபட்ட பல்வேறு துறை தேர்வில்
வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு
விருது வழங்கும் விழா

ஆலங்குளம் அரசு வட்ட நூலகம் சார்பில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்றது

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன். தாங்கினார்.

அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஷீலா, ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால்,வாசகர் வட்ட தலைவர்தங்க செல்வம், மனவளக்கலை மன்ற பேராசிரியர் புலவர் சிவஞானம்,சுரண்டை அரசு கல்லூரிஇயற்பியல் துறை பேராசிரியர் அருள்முகிலன் நல் நூலகர்
இராமசாமி,வீரகேரளம்புதூர் கருவூல கூடுதல் சார்நிலை
அலுவலர் அருணாசலம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலங்குளம் வட்டார நூலகர் பழனீஸ்வரன் வரவேற்புரை வழங்கினார் நடைப் பெற்ற விழாவில் ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் எம். திவ்யா மணிகண்டன், சிறப்புரை வழங்கியும் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணை யாத்தால் நடைப்பெற்ற பல்வேறு துறை தேர்வில்
வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்தும் விருது வழங்கியும் பாரட்டினார்.

நிகழ்வில் செங்கோட்டை வட்டார நூலகர் ராமசாமி,
நூலக பணியாளர்கள் பொண்சிங், இளங்கோ , தங்கராஜ், மற்றும் நூலக மாணவ மாணவிகள், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்

விழா முடிவில் ஆலங்குளம் வாசகர் வட்ட பொருளாளர்,
வெட்டும் பெருமாள்,நன்றியுரை வழங்கினார் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *