நாமக்கல்

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் அதன் நாமக்கல் சேலம் சாலையில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்றது

4756 லாரி உறுமையாளர்ளை உறுப்பினர்களாக கொண்ட இந்தத் சங்கத்தின் தேர்தலில்
4756 வாக்காளர்களை கொண்டு வாக்கு பதிவு செய்ய இன்று காலை முதல் நடந்து வந்தது

கடந்த வாரம் 29.30 ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது

தலைவர் பதவிக்கு கே. அருள் மற்றும் சுப்புரத்தினமும், செயலாளர் பதவிக்கு ராஜா என்கிற ராஜ்குமார் மற்றும் மயில் ஆனந்தம், பொருளாளர் பதவிக்கு சரண் சேகர் மற்றும் ஸ்ரீரங்கன் ஆகியோர் போட்டியிட்டார்கள்

இது தவிர இணைச்செயலாளர் துணைத் தலைவர் உள்ளிட்ட 60 செயற்குழு உறுப்பினர்களும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்

இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்களான தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எல்.எஸ்.சுந்தர்ராஜன் ,சின்னசாமி, பிரபாகர், ஆகியோர் வேட்பு மனுவை பெற்றுக் கொண்டு பரிசீலனை செய்த நிலையில் இன்று 10-ம் தேதி தேர்தல் நடைபெற்றது

தேர்தல் வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது உறுப்பினர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குப்பதிவு செலுத்தினர்

தலைவர் செயலாளர் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவை கேட்டு வாக்காளர்களிடம் கையேந்தி , கையெடுத்து கும்பிட்டு வாக்கு கேட்டனர்

மொத்த வாக்கு 4756 இதில் 3812 வாக்குகள் பதிவானது
944 வாக்குகள் பதிலாக வில்லை

கே. அருள் தலைவராக 2144 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் செயலாளர் ஆனந்த் 1997 வாக்குகள் பெற்று வென்றார்

பொளாளர் சீரங்கன் 1989 வாக்குகள் பெற்று வென்றார் உதவி தலைவராக எஸ். பாலசந்திரன் 2049 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார் துணை செயலாளராக எஸ். சந்திரசேகர் 2063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்

வெற்றி பெற்ற கே. அருள் அணி வேட்பாளர்களுக்கு லாரி உரிமையாளர்கள் அனைவரும் மாலை , சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்

மேலும் பட்டாசு வெடித்து மேளதாளம் கொட்டி அவர்களை தாலுகா லாரி உரிமையாளர் சங்க அலுவலகத்தில் இருந்து நாமக்கல் சேலம் சேலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள் 60 செயற்குழு உறுப்பினர்கள் வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கை நாளை 11.09 .2003 அன்று திங்கள் கிழமை நடைபெறும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *