தென்காசி

பாளையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற பாவூர்சத்திரம் மாணவ,மாணவிகள் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அமெச்சூர் ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் செயிண்ட் அந்தோணி பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு வயது பிரிவுகளில் ரோலர் ரேஸ், ரிங் ரேஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 168 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் தென்காசி மாவட்டம் சார்பில், பாவூர்சத்திரம் வெஸ்டர்ன் காட்ஸ் இந்தியன் அகடமி மாணவர்கள் 52 பேர் பங்கேற்று, 100க்கும் மேற்பட்ட பதங்கங்களை வென்று சாதனை படைத்தனர். இவர்கள் டிசம்பர் மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பரிசளிப்பு விழாவில், திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜு, பள்ளி தாளாளர் அந்தோணி ஆகியோர் பங்கு பதக்கங்களை வழங்கி பாராட்டினர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பயிற்சியாளர்கள் மாஸ்டர் கணேஷ், ராம்ராஜ் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *