செய்தியாளர் இரா. ஏசுராஜ்.

கும்பகோணம் ஆரிய வைசிய சமாஜம், ஸ்ரீ வாசவி பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் நிதியுதவியுடன் கும்பகோணம் ஹோஸ்ட் லயன் சங்கம், லியோ சங்கம், கும்பகோணம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி ,மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்த ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது

முகாமில் 493 பேர் பங்கேற்றனர்..கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ரத்தம் அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பரிசோதிக்கப்பட்டது. கண்களை பாதுகாப்பாக பராமரிப்பது .குறித்து அறிவுரை வழங்கப்பட்டது .160 பேர் அறுவை சிகிச்சை செய்ய இன்று பேருந்தில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 115 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய புதன் அன்று மதுரை செல்ல பரிந்துரைக்கப்பட்டனர்.
38 நபர்களுக்கு விலை இல்லா கண்ணாடி வழங்கப்பட்டது.

கடந்த மாதம் 30.08.2023 அன்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட 391பேர்களில் நேற்று 350 பேர்களுக்கு மறுபரிசோதனை செய்யப்பட்டு 118 பேர்களுக்கு விலை இல்லா கண்ணாடி வழங்கப்பட்டது

முகாமில் காலை முதல் மாலை வரை கலந்துகொண்டு பணியாற்றிய அனைத்து அரிமா நண்பர்களுக்கும் ,லியோ மாணவிகளுக்கும் சிறப்பாக செயல்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *