வலங்கைமான் அருகே உள்ள நார்த்தாங்குடியில் குடியிருப்பு பகுதியில் மேலும் ஒரு செல்போன் டவர் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தில்நேற்று புகார் அளித்தனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா நார்த்தாங்குடியில், மாரியம்மன் கோயில் தெருவில் தனியார் செல்போன் டவர் அமைக்க பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோன்றியுள்ளனர்.
இந்த இடத்தின் அருகே பல குடியிருப்புகள், அங்கன்வாடி மையம், தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இந்நிலையில் இப்பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் அதன் மூலம் கதிர்வீச்சு ஏற்பட்டு, பொதுமக்கள், பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படும் என அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தற்போது அமைக்கப்படும் செல்போன் டவருக்கு 20 மீட்டர் தொலைவில் ஏற்கனவே ஒரு செல்போன் டவர் உள்ளது. தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) விதிகளின்படி இருவரும் இருபது மீட்டர் தூரத்துக்குள் வேறு ஒரு டவர் அமைக்க கூடாது. ஆனால் (டிராய்) விதிகளை மீறி இந்த செல்போன் டவர் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதனால் இப்பகுதி மக்கள் புதிதாக அமைக்கப்படும் செல்போன் டவரை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி உள்ளனர்.
மேலும் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் ஆத்தங்குடி பாலசுப்பிரமணியன், வலங்கைமான் அ ம மு க ஒன்றிய செயலாளர் வீ. விவேகானந்தம், அரவத்தூர் வி. மணி, செம்மங்குடி சாமி ஐயா, வலங்கைமான் வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தொழிற்சங்க டிசி டி யு மாவட்டத் தலைவர் குலாம் மைதீன், மற்றும் ஊர் பொதுமக்கள் வலங்கைமான் தாலுக்கா அலுவலகம் மற்றும் காவல் நிலையத்திலும் புகார் மனு அளித்துள்ளனர்.