எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 27 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக இன்று திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இங்கு மாணவர்களுக்கு போதிய கட்டிட வசதி இல்லாத நிலையில் குழந்தை நேய பள்ளி உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 27 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா மற்றும் ஆசிரியர்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஜூனைதா பேகம் கமாலுதீன், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினர் இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *