பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.

துபாயில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி …..
தமிழகத்திலிருந்து ஏராளாமான பங்கேற்பு…

துபாய் அமீரக தமிழ் சங்கத்தின் நிறுவனர் டாக்டர்ர.ஷீலா பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.

துபாயில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி மற்றும் மற்றும் கலை நிகழ்ச்சிகள்
நிறுவனர் டாக்டர் .ஷீலா தலைமையில் நடைபெற்றது..

அமீரக தமிழ் சங்கம் மற்றும்
கர்தின் பல்கலைக்கழகம் இணைந்து திருக்குறள் ஒப்பிவித்தல் போட்டி கர்ட்டின் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் பாபநாசம் பகுதியை சேர்ந்த மாணவர்களும் , பள்ளி குழந்தைகளும் பெண்களும் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திருக்குறள் ஒப்புவித்து பரிசுகளை தட்டி சென்றனர்.

தமிழுக்காக, துபாய்யில் படிக்கும் குழந்தை களுக்கும் திருக்குறளை படிக்க ஊக்கப்படுத்தும் விதத்தில் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்ட இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பால் பிரபாகர் , அமீரக மண்ணின் மைந்தர் பதூர் அப்துல்லா காமிஸ், ஆர். ஆர். சேலம் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன், தொலைக்காட்சி வளைகுடா முதன்மை நெறியாளர் ,கமல்கேவிஎல் தொழில் அதிபர் உஸ்மான் அலி, தொழில் அதிபர் பகவத் ரவி, தொழிலதிபர் பாளையங்கோட்டை ரமேஷ், தொழிலாதிபர் வஹிதா, R J. அனுராதா மற்றும் தமிழ்நாடு வெளிநாடு வாழ் பெண்கள் அமைப்பின் இயக்குநர் டாக்டர் .ஷீலா , பாபநாசம் ரஜினி ரசிகர் மன்ற. ஒன்றிய நகர செயலாளர் பீர் முகமது ஆகியோர் கலந்து கொண்டு திருக்குறள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றிப் பெற்ற. மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழர்கள் குடும்பத்தோடும் , துபாய் நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *