சோழவந்தான்

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி கண்ணுடையாள்புரம் கிராமத்தில் அருள்பாலித்து வரும் காளியம்மாள் மாரியம்மாள். விநாயகர் .கருப்புசாமி ஆகிய கோவில்களில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செப்.19.ல் பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியநிலையில் கடந்த 5.நாட்களாக ஊராட்சி நிர்வாக கண்ணுடையாள்புரம் கிராம மக்களுக்கு சீராக குடிநீர் வழங்கவில்லை

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் முறையான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து 50.க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை அணைப்பட்டி சாலையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டன.இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காடுப்பட்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சேகர் யூனியன் அதிகாரிகள் பிச்சைமணி ஆகியோர் மறியலில் செய்தவர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் சீராக வழங்கப்படும் என உறுதியளித்ததின்பேரில் சாலை மறியலை கை விட்டு கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்புகுள்ளானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *