பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
அம்மாப்பேட்டை அருகே பூண்டி ஊராட்சியில்ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா…..
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே
பூண்டி ஊராட்சியில் உள்ள ஆரம்ப தொடக்க பள்ளிக்கு சுமார் ரூ. 30 லட்சம் மதிபீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடத்தை ஒன்றிய பெருந்தலைவர் கலைச் செல்வன் ,துணை பெருந்தலைவர் தங்கமணி தியாக சுரேஷ், ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர் இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் , பொதுமக்கள் , மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்..
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் கலைச் செல்வன் தலைமை தாங்கினார்.
துணை பெருந்தலைவர் தங்கமணி தியாக சுரேஷ் முன்னிலை வகித்தார் ஒப்பந்தகாரர் பழநியப்பன்,உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர் முடிவில் ஒன்றிய கவுன்சிலர் வெங்கட் நன்றி கூறினார்.