திருவள்ளூர்

கோட்டைக்குப்பம் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் 21 ஆம் நூற்றாண்டுக்கான கற்றல் கருவிகளைக் கொண்டு புதுமை முறையில் அமைக்கப்பட்ட கதா மேஜிக் லேப் துவக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது. கோட்டைக்குப்பம் ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட ஜமிலாபாத் கரி மணல் கிராமத்தில் மீஞ்சூர் ஊரா ட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள் ளி உள்ளது இப் பள்ளியில் சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள கதா என்ற தொண்டு நிறுவ னத்தின் பவுண்டர் மற்றும் பிரசி டென்ட் பத்ம ஸ்ரீ கீதா தர்மராஜன் அவர்களின் அறிவுறுத்தலின்படி 21 ஆம் நூற்றாண்டுக்கான கற்றல் கருவிகளைக் கொண்டு புதுமை முறையில் அமைக்கப்பட்ட கதா மேஜிக் லேப் என்ற புதிய பள்ளி வகுப்பு துவக்க ப்பட்டுள்ளது.

இதன் துவக்க நிகழ்ச்சியானது நேற்று கோட்டைக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற் றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விரு ந்தினராக பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மீஞ்சூர் ஊராட்சி ஒன் றிய குழு தலைவர் அத்திப்பட்டு ஜி ரவி, ஆகியோர் கலந்துகொண்டு கதா மேஜிக் லேப் வகுப்பினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். மேலும்பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேமலதா, கிராம மக்கள் மற்றும் குழந்தை கள் இணைந்து குத்து விளக்கே ற்றி விழாவினை சிறப்பித்தனர். இதில் இதில் கதா தொண்டு நிறுவனத்தின் சீனியர் மனேஜர் நெப்போலியன், ஒருங்கிணைப் பாளர் வசந்தி, மற்றும் ஆசிரியர் கள் என பலர் கலந்து கொண்டன ர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *