தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாளாண்மை முகமை திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன அமைப்புகளின் பராமரிப்பு முறைகள் தொடர்பான விவசாயிகள் பயிற்சி பாவூர்சத்திரம் ஒருங்கிணைந்த வேளாண்மை விவாக்க மையத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த பயிற்சியில் கீழப்பாவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சேதுராமலிங்கம் தலைமையேற்றார். வேளாண்மை உதவி இயக்குநர் மணிகண்டன், சொட்டு நீர்ப்பாசனம், நுண்ணீர் பாசன்ம் என்பது முதன்மை குழாய் துணைக் குழாய்கள் மற்றும் பக்கவாட்டுக் குழாய்கள் ஆகிய அமைப்புகள் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை துளித்துளியாக மண்ணிண் மேற்பரப்பிலோ அல்லது பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாக வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்..
ப்ளோ டெக் சிக்னட் நிறுவனத்திலிருந்து நுண்ணீர் பாசன்ம் அமைப்புகளின் பராமரிப்பு முறைகள் குறித்து எடுத்துரைத்துனர். விமலாதேவி வேளாண்மை அலுவலர், வேளாண்ணமா துறையில் உள்ள மானிய திட்டங்கள் பற்றியும் நுண்ணீர் பாசனம், திட்டத்தின் மானியங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
உழவன் செயலி குறித்து திருமதி சகுந்தலாதேவி வட்டார தொழில்நுட்ப மேலாளர் எடுத்துரைத்து நன்றி கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சந்திரன் மற்றும் முத்துராஜா செய்திருந்தனர்.