திருநிலை ஊராட்சியில் பள்ளி கட்டிடம் முதல்வர் காணொளியில் திறப்பு : சேர்மன்,தலைவர்,துவக்கி வைப்பு.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத் தின் கூடுதல் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதனை தமிழக முத ல்வர் மு க ஸ்டாலின் சென்னை யில் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதன்படி சோழவரம் ஒன்றியம் திருநிலை ஊராட்சியில் முதல்வர் காணொளி காட்சியில் திறந்து வைத்த அரசு தொடக்கபள்ளி கட்டிடத்தை சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராசாத்தி செல்ல சேகரன், திருநிலை ஊரா ட்சி மன்ற தலைவர் அம்மு சிவக் குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதில் மண்ட ல துணை வட்டார வளர்ச்சி அலுவ லர் காமேஷ்வரி, திருநிலை கிராம நிர்வாக அதிகாரி ஜெயப்பிரதா, துணைத் தலைவர் தனசேகரன், ஊராட்சி செயலாளர் காமேஷ், மற்றும் வார்டு உறுப்பினர்கள் பள் ளி தலைமை ஆசிரியர், கல்யாணி ஆசிரியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *