பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.
அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம் சாலையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடமாற்றம் செய்ய கிராம மக்கள் கோரிக்கை ….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம் செல்லும் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் கணபதி அக்ரஹாரம் மகா கணபதி கோவில் திருவையாறு திங்களூர் சந்திரன் கோயில்களுக்கு இந்த சாலை வழியாக செல்வார்கள்.
இந்நிலையில் கணபதி அக்ரஹாரம் சாலையில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக. சாலையோரம் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது .
இதில் இரவு நேரங்களில் இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
பயன்பாட்டில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் மேல்கு குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை வேறு இடத்திற்கு மாற்றுமிற அந்த இடத்தில் ஒளிரும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் மேலும் இதேபோன்று அய்யனார் கோவில் அருகிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.