நாமக்கல்
உலக சுற்றுலா தினம் ஆண்டுதோறும் இன்று செப்டம்பர் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது இந்த 2023- ம் ஆண்டு சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள் என்ற தலைப்பில் நடைபெறுகிறது.
இதன்படி நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், அரியூர் நாடு ஊராட்சியில், மாவட்ட சுற்றுலா துறை மற்றும் அந்த கிராம ஊராட்சி சார்பில் உலக சுற்றுலா தினம் மற்றும் தூய்மைப் பணிகள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிஅரியூர் நாடு ஊராட்சி மன்றத் தலைவர் சி. நாகலிங்கம்,தலைமையில் நடைபெற்றது..
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர்
வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் கௌரிசங்கர்,
மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலக கள விளம்பர அலுவலர் பிபின் எஸ். நாத், கள விளம்பர உதவியாளர் தியாகராஜன்,மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள், பழனிச்சாமி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, மலர்ச் செடிகள் மற்றும் மரக்கன்றுகளை நட்டனர்
அரியூர் சோளக்காடு உட்பட்ட அருவி பகுதியில், அரளி ரோஜா உள்ளிட்ட மலர் செடிகள் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
மேலும், கொல்லிமலையில் பாரம்பரியமிக்க கும்மி பாடல் பாடி பெண்கள் கொல்லிமலை சுற்றுலா தளங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.