வலங்கைமான் அருகே உள்ள தொழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூங்கில் நடும் பணி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் தேசிய மூங்கில் இயக்க ( 2023-24) திட்டத்தின் கீழ் பொது இடங்களில் மூங்கில் பரப்பு விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொது இடங்களில் மரங்கள் வளர்ப்பு, சுத்தமான காற்று பெறுதல், கைவினை பொருட்கள் தயாரிப்பு போன்ற நோக்கங்களைக் கொண்டு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் வலங்கை மானை அடுத்துள்ள தொழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மூங்கில் நடும் நிகழ்வு கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது .
இதில் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமாரமங்கலம் சங்கர், தோட்டக்கலை உதவி இயக்குனர் திருச்செல்வம், தோட்டக்கலை அலுவலர் ரம்யா, உதவி தோட்டக்கலை அலுவலர் அஜந்தா, தொழுவூர்முனுசாமி, ரவிச்சந்திரன், பிரபாகரன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மூங்கில் நடவு செய்யப்பட்டது.