வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் வட்டாரம் அய்யம்பேட்டை ஊராட்சியில் தூய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் வட்டாரம் அய்யம்பேட்டை ஊராட்சியில்மானந்தகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தூய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கட்டுரைப் போட்டி, ஓவிய போட்டி, உறுதிமொழி ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ ) பாஸ்கர், பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ் செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் மங்கையர்க்கரசி செல்வ விநாயகம் ,ஊராட்சி மன்ற செயலாளர் மணி மற்றும் தூய்மை பாரத வட்டார ஒருங்கிணைப்பாளர் வீராசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.