பாபநாசம்செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.
பாபநாசம் அருகே ராஜகிரியில் மிலாது நபி பெருவிழாவை முன்னிட்டு பக்கீர்மார்கள் இசை முழங்க முக்கிய வீதிகள் வழியாக இஸ்லாமியர்கள் பேரணி…….
தமிழகம் முழுவதும் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மீலாது விழா நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரியில் மீலாது நபி விழா பேரணி நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் பக்கீர்மார்களின் மேளதாள இசைகள் முழங்க, பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கையில் பதாகைகள் ஏந்தி முக்கிய வீதிகளின் வழியாக அங்கு இருந்தவர்கள் நபிகள் நாயகத்தின் புகழ்
பாடிய வண்ணம் வந்தனர். நிகழ்ச்சியில் சிறுவர்கள் நபிகள் நாயகத்தை பற்றி புகழ்ச்சியையும், பெருமையும் பற்றி விளக்கி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.