என் தட்டக்கல் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் துவக்க விழா பொதுக்கூட்டம்.
சக்கரவர்த்தி,தலைமையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட என் தட்டக்கல் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் கிளைச்சங்கம் துவக்க விழா பொதுக்கூட்டம்.
சக்கரவர்த்தி,தலைமையில் நடைபெற்றது

தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் சின்னசாமி ,நிகழ்ச்சியில் பேசிய போது தமிழக அரசு மூன்று கோரிக்கை குறைந்தபட்ச விலை தர வேண்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்ச மாங்காய் சாகுபடி செய்வதால் அரசாங்கமே கொள்முதல் செய்து தொழிற்சாலை அமைக்க வேண்டும் நாகரசம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெரிய ஏரி உள்பட பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் கிருஷ்ணகிரி பகுதியில் அதிக மல்லிப்பூ விளைச்சல் உள்ளதால் போச்சம்பள்ளி சிப்காட்டில் பூ தொழிற்சாலை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை,வைத்தார் நிகழ்ச்சியில் மாநில செயலாளர் செந்தில்குமார் சி.மோகன் ஜி. அன்பழகன் சி .பாக்யராஜ் வி .கதிர்வேல் பி. அரவிந்த் ஆர்.ஈஸ்வரன் சி .பிரபு எம்.சசிதரன்.ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

மாநிலத் துணைத் தலைவர் செந்தில்குமார்.ஸ்ரீராம் மாவட்டத் துணைத் தலைவர் ஸ்ரீராம் ரெட்டி. 200க்கும் மேற்பட்ட விவாசயிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *