கடையம் ஒன்றியக்குழு அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ;-
தென்காசி மாவட்டம் கடையம் கல்யாணிபுரம் பகுதியில் இலவச வீடு மனை பட்டா வழங்கி இதுவரை அளவு செய்து தரவில்லை உடனடியாக இலவச வீடு மனை பட்டா வழங்கிய இடத்தில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் உடனடியாக சர்வே செய்து ஏழை மக்கள் குடியிருக்க இடம் தரவேண்டி
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியக்குழு
அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகடையம் ஒன்றியச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
நிகழ்வில் மாதர் சங்க கடையம் ஒன்றியச்செயலாளர் பாரதி, மாதர் சங்க மா . தலைவர் ஆயிஷாபேகம்,
துனைச் செயலாளர் சின்னத் தாய், விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் வேலுமயில், விவசாயிகள் சங்க கடையம் ஒன்றியச்செயலாளர் இரா.முத்துராஜன் மற்றும் கடையம் கல்யாணிபுரம் ஊரை நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் 60 க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.