எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உரிய மக்களிடம் வழங்காததை கண்டித்து வட்டாச்சியர் அலுவலகம் காத்திருப்பு போராட்டம் :
மயிலாடுதுறை மாவட்டம் ஏருக்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட இருளன் தோப்பு கிராம மக்களுக்கு 1999 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இப்பகுதி மக்களுக்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தை உரிய பயனாளிகளுக்கு இதுநாள்வரை வழங்கப்படவில்லை, இதனை கண்டித்து பலமுறை அப்பகுதி கிராம மக்கள் போராட்டங்கள் நடத்தியும் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறையால் கையகப்படுத்தப்பட்ட இடத்தை உரிய பயனாளிகளுக்கு பிரித்துக் கொடுக்க வலியுறுத்தியும், சீர்காழி அருகே திட்டை ஊராட்சியில் உள்ள குளங்கரை கிராமத்தில் பல தலைமுறைகளாக வசித்து வரும் 22 குடும்பங்களுக்கு குடிமனைகளை கிராம கணக்கில் பதிவு செய்து பட்டா வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.