வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் பகுதியில் உள்ள, செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் பகுதியில் உள்ள, செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் தீபங்குடி கிராமத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் தொடக்க விழா பள்ளியின் தலைமையாசிரியர் டி.வி. ராமன் தலைமையில் நடைபெற்றது,பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் இரா தினேஷ் முன்னிலை வகித்தார், முகாமை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இரா. அன்பழகன் சிறப்புரையாற்றினார்,
நல்லாசிரியர் எண்கண் சா.மணி, செம்மங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயந்தி சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செ.மு. தருமையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், முன்னதாக திட்டஅலுவலர் க. முருகதாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார், இறுதியாக உதவி திட்ட அலுவலர் இர. சரவணக் குமார் நன்றி உரை கூறினார்.