புதுச்சேரி பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றுவருகிறது.
நான்காம் நாள் நிகழ்ச்சிகளாக காலையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் நோக்கவுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் பேரணியைத் தொடங்கிவைத்து வாழ்த்துரை வழங்கினார்.
பிற்பகல் யோகா பயிலரங்கம் நடைபெற்றது. வணிகவியல் விரிவுரையாளர் முத்துக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
அகில இந்திய பயிற்சியாளர் மற்றும் நடுவர் மகேஸ்வரி கலந்துகொண்டு மாணவிகளுக்கு யோகாவின் அவசியம் குறித்து கருத்துரை வழங்கி யோகா பயிற்சி அளித்தார்.