பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் சார்பாக தொடர்ந்து 22 வது ஆண்டாக நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ரோஜா,மல்லி,தாமரை என சுமார் 2 டன் மலர்களால் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது…

பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் சார்பாக ஒவ்வொரு ஆண்டும்,கோவை வடவள்ளி,நியூ தில்லை நகர் பகுதியில் ஐயப்பசுவாமிக்கு புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் தொடர்ந்து 22 ஆம் ஆண்டாக புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி வடவள்ளி, நியூ தில்லை நகர் பகுதியில் உள்ள வைதீக சமாஜத்தில் நடைபெற்றது..

விழாவையொட்டி,கணபதி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி குபேர ஹோமம்,சுதர்சன மற்றும் நவக்ரஹ ஹோமங்களுடன் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து ஸ்ரீ ஜெயராமன் பாகவதர் தலைமையான குழுவினர் நாமசங்கீர்த்தனம் பாடி அசத்தினர்.இதனை கூடியிருந்த பக்தர்கள் பரவசத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்…

தொடர்ந்து,பந்நள குமாரன் சேவா டிரஸ்டின் செயலாளர் ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தின் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் தலைமையில் ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது..இதில் பதினெட்டு படிகளுக்கும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தத்ரூபமாக வீற்றிருக்கும் ஐயப்பனுக்கு தாமரை,ரோஜா,மல்லி,சாமந்தி,என சுமார் 2 டன் எடையில் 18 வகை மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட்டின் தலைவர் ராஜா வாத்யார்,மற்றும் உறுப்பினர்கள் திருமூர்த்தி ஐயா,விக்னேஷ்,விவேக்,மது வெங்கட்ராமன்,நாகராஜன்,சதீஷ் சிவராம கிருஷ்ணன், மகேஷ் உட்பட பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *