பாலமேடு கிராமத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆலயத்தில் பழனி பாதயாத்திரை குழு சார்பாக திருவிளக்கு பூஜை

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆலயத்தில் பழனி பாதயாத்திரை குழு சார்பாக திருவிளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இப்பகுதியில் விவசாயம் மற்றும் மண்பாண்டதொழில் செழிக்க வேண்டியும், புயல் வெள்ள கன மழை பாதிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும் உலக நன்மைக்காகவும் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆலயத்தில் பழனி பாதயாத்திரை குழு சார்பாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் .


கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும்
பூஜை பொருட்களும், பிரசாதமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குலாலர் உறவின்முறை தலைவர் மகாலிங்கம் செயலாளர் செல்வ கண்ணன் பொருளாளர் நடராஜன் குருநாதர் குமரேசன் உள்ளிட்ட நிர்வாகஸ்தர்கள் மற்றும் குலாலர் இளைஞர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *