சீர்காழியில் மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகியிருந்து கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருந்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம்,இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை இந்தியில் பெயர் மாற்றம் செய்தும், புதியதாக சட்டத்தை மாற்றம் செய்ததை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்கள் எழுப்பி சீர்காழி வழக்கு ரைஞர் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஜீவானந்தம் தலைமையில், செயலாளர் மணிவண்ணன் முன்னிலையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டம் செய்தனர்.

இதில் மூத்த வழக்கறிஞர் ரங்கராஜு அப்துல்லாஷா,குமரேசன்,கவிதா, கார்த்திக், ராம்குமார், ராஜேஷ், செந்தில்குமார், தாமஸ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *