சித்தாமூர் ஒன்றியத்தில்
1000 ஏழை எளியவர்களுக்கு அன்னதானம்.
செங்கல்பட்டு மாவட்டம்
சித்தாமூர் கிழக்கு ஒன்றியம் தேமுதிக சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் 11 வது நாள் துக்கதினம் அனுசரிக்கும் விதத்தில்
புகழஞ்சலி மற்றும் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து 11 வது நாள் துக்கம் தமிழகம்
முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம்
சித்தாமூர் கிழக்கு ஒன்றியம் தேமுதிக சார்பில் புகழஞ்சலி செலுத்தும் வகையில் கட்சியினுடைய
ஒன்றிய செயலாளர் சந்திரகாந்த் தலைமையில் தேமுதிக வினர் சித்தாமூர் வட்டார வளர்ச்சி
அலுவலகம் எதிரே விஜயகாந்த் திருவுருவ படம் அலங்கரிக்கப்பட்ட வளாகத்தில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின்பு அப்பகுதியில் கூடியிருந்த
1000-ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினர் இந்நிகழ்வில் அவைத் தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரமேஷ் பிரபாகரன்,பொருளாளர் சம்பத்,மாவட்ட கழகப் பொருளாளர் பிரகாசம், சேஷா, யுவராஜ்,வர்த்தக அணி பி.தணிகாசலம் உட்பட ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.