துணை பொது செயலாளர் ரெங்கசாமி தலைமையில் புதுச்சேரி அ ம மு க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
(வி தங்கப்பிரகாசம் செய்தியாளர், புதுச்சேரி)
புதுச்சேரி ஜனவரி 9 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க கழக துணை பொது செயலாளர் ரங்கசாமி தலைமையில் புதுச்சேரி மாநில கிழக்கு மற்றும் மேற்கு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள பழனிச்சாமி ஹோட்டலில் நடைபெற்றது .இந்த கூட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ யூ. சி.ஆறுமுகம், மேற்கு மாநில கழக செயலாளர் எஸ். டி. சேகர், கிழக்கு மாநில செயலாளர் கே. முருகன் ஆகியோர் ஏற்பாட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியை பலப்படுத்த அனைத்து தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகளையும் பொறுப்பாளர்களையும் நியமிக்கவும் அதுபோல் வரும் 17ஆம் தேதி புதுச்சேரி வழியாக கடலூர் வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் அவர்களை சிறப்பான முறையில் வரவேற்பு கொடுப்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவைத் தலைவர் அரிகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் மாநில இணை செயலாளர் லாவண்யா, மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் சீதாராமன், மாநில மகளிர் அணி செயலாளர் காமாட்சி,வீரப்பன் மங்கலக்ஷ்மி பூங்குழலி தொழிற்சங்க மாநில செயலாளர் அம்மா சுரேஷ் , இளம்வழுதி, கலியமூர்த்தி, சரளா, சந்திரா, உமா, அமலா, ராமச்சந்திரன், ரகுபதி, சிவக்குமார், முருகன், தமிழ் குமரன், கலைவாணி, சுப்புலட்சுமி, டாக்டர் சிலம்பரசன், உதயானந்தம், ரத்தினவேல், சந்திரன், தனவேல், வாசு, சுதாகர் தட்சிணாமூர்த்தி, தமிழ் செல்வன், வேத பிரகாஷ், முருகன், பாலமுருகன், ஜெகதீஷ், புஷ்பா, பரிதிமாற் கலைஞன், முருகையன், சரவணன், மல்லிகா, சக்தி , இரிசம்மாள், பாலமுருகன், விக்ரம், மகேஸ்வரி, சித்ரா, ஜான்சன், ஜான்சி, ராணி, மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்