நெட்டப்பாக்கம்.ஜன.12. நெட்டப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதில் ஆதி அந்த விநாயகர் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.

பின்னர் வெள்ளிக் கவசம் சாற்றி தூப தீப ஆராதனைகளும் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு கற்பூர ஜோதி தரிசனம் நடந்தது.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஶ்ரீ ராமபக்த விநாயக சுவாமிகள் சுவாமிகளுக்கு விசேஷ பூஜைகள் நடத்தினார். இந்நிகழ்ச்சியில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *