திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி அருகே புதியதாக துவங்கப்பட்ட எஸ்.எஸ்.ஹெல்த் கேர் மருத்துவமனையில் 500 -க்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு வழங்கி -இலவச சிகிச்சை

திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எஸ்.எஸ்.ஹெல்த் கேர் என்ற புதியதாக மருத்துவமனை துவங்கப்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக இலவசமாக உணவு வழங்கி 500-க்கும் மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா நோய் சிறப்பு மருத்துவர் இளம்பரிதி கலந்துக்கொண்டு சிகிச்சை அளித்தார் இந்த முகாமை மருத்துவர் அன்புமணி ஏற்பாடு செய்திருந்தார்.

இன்று சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஒன்றிய துணை சேர்மனும், முன்னாள் ஒன்றிய துணை செயலாளரும், கதிரம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சுமதி சுப்பிரமணி, கலந்துக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *