அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கம் ஆயிரம் ரூபாயினை ரேஷன் கடைகள் மூலம் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வழங்கி தொடங்கி வைத்தார்

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூர் மற்றும் கள்ளிவேலிபட்டி ஆகிய இடங்களில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு பொருட்களான வேஷ்டி சேலை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு அனைத்து ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நீர் பாசன குழு தலைவர் விஜயன், பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், ஒன்றிய குழு தலைவர் பஞ்சுஅழகு, ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பாராயலு, தண்டலை சரவணன், ஜெகதீஸ்வரி, வசந்திஇளமாறன், ஒன்றிய துணை செயலாளர்கள் அருண்குமார், ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்குமார் திருநாவுக்கரசு, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்
தவசதீஸ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *