ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு செய்தார்

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 17ஆம் தேதியும் பாலமேட்டில் வரும் 16ஆம் தேதியும் அரசு வழிகாட்டுதலின் பேரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது

ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடங்களில் நடைபெறும் கேலரி பணி வாடிவாசல் வர்ணம் பூசும் பணி பார்வையாளர்கள் அமருமிடம் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் சிறப்பு பார்வையாளர்கள் அமருமிடம் ஜல்லிக்கட்டு காளைகள் நிறுத்துமிடம் ஜல்லிக்கட்டு காளைகள் வெளியேறி செல்லும் இடம் காளையை அடக்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் இடம் ஆகியவற்றை அமைச்சர் மூர்த்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தொடர்ந்து அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார். முன்னதாக தமிழக அரசு சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இவருடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம், வாடிப்பட்டி தாசிலார் மூர்த்தி, திமுக மாவட்ட அவை தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், பாலமேடு நகர செயலாளர் மனோகரவேல்பாண்டியன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரிகோவிந்தராஜ், சுமதிபாண்டியராஜன், துணைத் தலைவர்கள் சுவாமிநாதன், ராமராஜ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஜூலான்பானு, தேவி, பாலமேடு மஞ்சமலை மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதிதங்கமணி, மற்றும் உறுப்பினர்கள் சங்கரலிங்கம், ஜெயராமன், கிருஷ்ணன், குமரேசன், சுரேஷ், சந்திரன், ராஜமாணிக்கம், முத்துச்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்குமார், காயத்ரி இதயச்சந்திரன், மற்றும் ஒன்றிய கவுன்சிலர் தண்டலை சரவணன், தொழிலதிபர் கண்ணன், தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் வாவிடமருதூர் கார்த்திகேயன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதாப், சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்
தவசதீஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்சந்தனகருப்பு, பொறியாளர் அணி ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *