ஆயக்குடியில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடியில் AVK சிலம்பம் குரூப்ஸ் மற்றும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.

இந்நிகழ்வின் தலைமையாக சிலம்ப மாஸ்டர் வடிவேல் குமார் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் மன்சூர் ஹூசைன் மற்றும் முன்னிலையாக
பொன்.முருகானந்தம் பால்பாண்டி மணிமேகலை
மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக சமூக ஆர்வலர்
அபுல் கலாம் சர்தார், சின்னவர் என்ற
அஜ்மத் அலி ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.

இந்நிகழ்வில் அதிர்ஷ்டப் போட்டிகள், கும்மியடித்தல்,
சிலம்பம் பயிற்சி ஆட்டம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து காண்பித்து சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.

தொடர்ந்து குழந்தைகளின்
சாகச நிகழ்ச்சிகளை காண்பதற்கு பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது குழந்தைகளின் வீரதீர செயல்களை பார்த்து கண்டு ரசித்து கைதட்டி பாராட்டுகளை தெரிவித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *