விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் வழுதாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் மூலம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. பள்ளி உதவி இளங்கோ தலைமை ஆசிரியர் வரவேற்றார்பள்ளி தலைமை ஆசிரியர் குமார் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கண்டமங்கலம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.எஸ்.வாசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு 73 மிதிவண்டிகள் வழங்கினார்.

இதில் ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி முருகன், மாலதி மகேந்திரா வர்மன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தில்ஷத் பேகம் கிளை செயலாளர் காண்டீபன் , அவைத் தலைவர் அண்ணாதுரை, பிரதிநிதி நூர் முகமது ,பள்ளி ஆசிரியயை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முதுகலை ஆசிரியர் திருமுருகன் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *