பிரதமர் மோடி வருகை:
மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை…
பிரதமர் மோடி கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வருகிறார். அதன் பின்னர் நாளை திருச்சி, ராமேஸ்வரம் கோவில்களுக்கு செல்கிறார். அங்கு இரவு தங்கிவிட்டு, 21-ந் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை விமான நிலையம் வந்து, பின்னர் மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
அவரது வருகைக்காக செய்ய வேண்டிய பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இதில், டெல்லியில் இருந்து பிரதமரின் தனி பாதுகாப்பு சிறப்பு சூப்பிரண்டு சைனி தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த கூட்டத்தில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக் குமார்,மத்திய பாதுகாப்பு படை துணை கமாண்டண்ட் விஸ்வ நாதன், விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அதிகாரி கணேசன், மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டோங்ரே பிரவீன் உமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, பிரதமரின் வருகையையொட்டி விமான நிலையம் மற்றும் விமான நிலைய வெளிப்பகுதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும், பாதுகாப்பு அதிகாரிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.