திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம்
விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஆவணப்படங்களின் மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கீதா இளங்கோவன் அவர்களின் நான்காவது ஆவணப்படம் மாதவிடாய் . .ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் ஒரு பெண் பின் நிற்கிறாள் என்பது பொன் மொழி .திருமதி கீதா இளங்கோவன் அவர்களின் வெற்றிக்கு அவரது கணவர் திரு .இளங்கோவன் முன் நிற்கிறார் என்பது புது மொழி .அவர் தந்த ஊக்கம் பாராட்டுக்குரியது .ஆவணப்படம் பேசத் தயங்கும் விசயத்தை துணிவுடன் படமாக்கிய திருமிகு கீதா இளங்கோவன் அவர்களுக்கு .பாராட்டுக்கள் .

இந்தப் படம் பல விழிப்புணர்வை விதைத்து உள்ளது .ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாக உள்ள மூட நம்பிக்கைகளை சாடும் விதமாக உள்ளது .ஒய்வு பெற்ற காவல்துறை பெண் அதிகாரி எழுத்தாளர் திலகவதி சட்டமன்ற உறுப்பினர் பால பாரதி ,திருச்சி பாரதி தாசன் பல்கலைக் கழகப் பேராசிரியர் தொடங்கி கிராமங்களில் உள்ள விவசாய கூலி பெண்கள் வரை அனைத்து தரப்பினரையும் நேர்முகம் கண்டு பதிவு செய்துள்ளார் .ஆவணப்படம் என்பதும் முற்றிலும் பொருந்தும் பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் என பலரின் கருத்தையும் ஆவணப் படுத்தி உள்ளார் .

கிராமங்களில் இன்றும் மாதவிடாய் ஆன பெண்களை தனியா ஒரு அறையில் இருக்க வைத்து விடும் கொடுமை நடந்து வருகின்றது .பள்ளி மாணவி வருத்தத்துடன் அவர் கருத்தை பதிவு செய்துள்ளார் .பரீட்சைக்கு படிக்க முடியாது .இந்த அறையில் மின்சாரம் இல்லை .விளக்கு இல்லை கொசுத் தொல்லை .இந்த அறியில் இருப்பதால் ஊருக்கே நாம் மாதவிடாய் ஆனது தெரிந்து விடுகின்றது .

வயதிற்கு வந்த பெண்கள் மாதா மாதம் வருகிறாளா என்று கவனிப்பார்கள் .சாதரணமாக சில நாள் தள்ளிப் போவது இயல்பு . அதற்கு கற்பம் என்று தவறான அர்த்தம் கற்பித்து விடுவார்கள் என்று பயந்து ஆக விட்டாலும் ஆனதுபோல இந்த அறைக்கு வந்து அமர்ந்து விடுவோம் .என்று பெண் கூறி உள்ளார் .
இந்தப் படம் பார்த்து விட்டு இந்த விழாவில் பேசியபோது நான் குறிப்பிட்டேன் .ன்பான் பெண் விடுதலை பற்றி முற்போக்கு கவிதைகள் எழுதிய போதும் பேசியபோதும் , நான் என் மனைவி நாப்கின் என்னை வாங்கச் சொன்னால் நான் மறுத்து விடுவேன் .இந்தப்படம் பார்த்தபின் எனக்குள் மன மாற்றம் வந்தது .

இனி நான் நாப்கின் வாங்கி கொடுப்பேன் .இது ஆண்களுக்கான படம் மட்டுமல்ல பெண்களும் பார்க்க வேண்டிய படம்தான் .
நம் நாட்டில் ஏவு கணைகள் ஏவி விட்டோம் .அணுகுண்டு வெடித்து விட்டோம் .சந்திரனுக்கு சந்திரயான் அனுப்பி விட்டோம் என்பதல்ல பெருமை .”பெண்களுக்கு பெண்களின் கழிவிடங்களில் மாதவிடாய் கழிவுகளை அழிப்பதற்கு வழி செய்து விட்டோம் என்பதே பெருமை “.என்பதை உணர்த்தும் படம் இது .இந்த விழாவிற்கு வந்த கல்லூரி மாணவி சொன்னார் .

கல்லூரி மூலமாக தேசிய மாணவியர் படை கிராமம் சென்றால் .மாதவிடாய் கழிவு அகற்ற படும் பாடு மிகவும் கஷ்டம் .என்றார் .நான் அமெரிக்கா சென்று உள்ளேன் அங்கு பெண்கள் கழிவறையில் நாப்கின் எடுத்துக் கொள்ளவும் ,கழிவு போடுவதற்கு தனி பேடியும் உள்ளது .வாரா வாரம் இந்த பெட்டி பராமரிக்கிறார்கள் .என்றார் .நம் நாட்டில் அவல நிலை இன்னும் தொடர்கின்றது .

இந்த படத்தின் இயக்குனர் தகவல் அறியும் சட்டத்தின் படி கேட்டுள்ளார் .பெண்கள் மாதவிடாய் கழிவு அகற்ற சுகாதார நிதி ஒதிக்கி அரசு ஆணை உள்ளதா ? என்று .இது வரை இல்லை என்று பதில் வந்துள்ளது. அதையும் படம் பிடித்து உள்ளார் .பாராட்டுக்கள் .

மூட நம்பிக்கை கார னமாக பெண்களை கோயிலில் அனுமதிக்காத நிலை .இந்து கிறித்தவர் முகமதியர் என்று எல்லா மதத்தினரிடம் மூட நம்பிக்கை உள்ளது .அர்ச்சகர் ,அருட்தந்தை ,முல்லா போன்ற பதவிகளில் பெண்களை அனுமதிப்பது இல்லை .இன்னும் ஐய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை .ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடே .இப்படி பல சிந்தனைகளை அதிர்வுகளை உருவாக்கி உள்ளது

இந்தப்படம் .படம் பார்த்து விட்டு வந்த பின்னும் இரவு முழுவதும் .பெண்களுக்கான துன்பத்தை துயரத்தை நினைத்து தூக்கம் வர வில்லை எனக்கு .அலுவலகத்தில் பணி புரியும் பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் மாற்றிக் கொள்ள வசதி இல்லை என்பதற்காக ,சிறுநீர் வரக் கூடாது தண்ணீர் கூட குடிக்காமல் இருக்கிறார்கள் .இதனால் மன உளைச்சல் சிறுநீர் தொற்று நோய் ,கற்பப்பை புற்று நோய் வருகின்றது என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர் .இனியாவது பெண்கள் கழிவறைகளில் மாதவிடாய் கழிவு போடுவதற்கு வசதி செய்து தர வேண்டும் அரசு .ஆயரதிர்க்கு மேல் பண்கள் பனி புரியும் தலைமை செயலகத்தில் கூட இந்த வசதி இன்னும் செய்யப்பட வில்லை .

இந்தப் படம் பார்க்கும் ஆண்களுக்கு பெண்கள் மீதான மதிப்பு உயரும் .மாதவிடாய் காலங்களில் அவர்களிடம் அன்பு செலுத்து வேண்டும் .இப்படி பல போதனைகளை தந்துள்ள மிக நல்ல படம் .பாராட்டுக்கள்.இந்தப் படத்தில் மூட நம்பிக்கை காரணமாக குடுபத்துடன் திருப்பதி செல்ல முன் பதிவு செய்து விட்டோம் .எனக்காக பயணத்தை தள்ளிப்போட முடியாது .எனக்கு மாதவிடாய் வரும் தேதி என்பதால் மாதவிடாய் தள்ளிப் போகட்டும் என்று சிலர் மாத்திரை சாப்பிடுகின்றனர் .

இது மிகவும் தீங்கு .ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .எனவே இனி யாரும் இந்த தள்ளிப் போக மாத்திரை சாப்பிடாதீர்கள் என்ற கருது இடம் பெற வில்லை .ஆனால் முப்பது நிமிட குறும்படத்தில் இவ்வளவு சொன்னது பெரிய விசயம் .இயக்குனர் கீதா இளங்கோவனுக்கு பாராட்டுக்கள் .விரைவில் நல்ல திரைப்படம் ஒன்று இயக்குங்கள் ..வாழ்த்துக்கள் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *