ஊராட்சி மன்ற தலைவருக்கு சமூக இயக்கம் பாராட்டு.
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் ஊராட்சி
மன்ற தலைவருக்கு சமூக இயக்கம் பாராட்டு
தெரிவித்து வருகின்றனர்.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் செ.மனோகரன் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழை எளிய மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து பொதுமக்களுக்கும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு சமூக நல பணிகளையும் மிக சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறார்.
மேலும் இவர் குறிப்பாக பழங்குடியின இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். இவரின் சமூக பணியை பாராட்டி சமூக இயக்கம் பல்வேறு அறக்கட்டளை மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.