புதிய நியாயவிலை கடையை
ப.ரவீந்திரநாத் எம்.பி. திறந்து வைத்தார்…

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 22 வது வார்டு பகுதியில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2022 – 2023ன் கீழ் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையை பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் எம்.பி. திறந்து வைத்து 1383 குடும்ப அட்டை தாரர்கள பயன் பெறும் வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இந்நிகழ்வில் கூட்டுறவு சங்க சார்பதிவாளர் ராதா, வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திக் ராஜா,மேலாளர் சம்பத், விற்பணையாளர்கள் குருசாமி, கோவிந்த ராஜ், ஈஸ்வரி, பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் மீனா, அஇஅதிமுக கழக அமைப்புச் செயலாளர் மஞ்சுளா முருகன், ராஜகோபால், இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கு. நாராயணன்,வி. டி.எஸ்.ராஜவேல், பெரியகுளம் நகர் கழக செயலாளர் அப்துல் சமது, நகர் கழக செயலாளரும், நகர்மன்ற உறுப்பினரும், பெரியகுளம் நகராட்சி அஇஅதிமுக நகர்மறை உறுப்பினர்கள் குழு தலைவருமான ஓ.சண்முக சுந்தரம், பெரியகுளம நகராட்சி 22வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இராணி நாராயணன், கழக நகர்மன்ற உறுப்பினர்கள் குருசாமி, சந்திரா, சத்யா, நகர்மன்ற துணைத் தலைவர் ராஜா முகமது, அஇஅதிமுக மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *