தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் தை மாதம் 23/1/24 செவ்வாய்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதர்க்கும் ஒன்பது வகையான அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்து தீபாராதனைகளும் நடைபெற்றது. உலக
அமைதிக்காக கூட்டு வழிபாடும் தேவாரம், திருவாசகம் பக்தர்கள் பக்தியுடன்பதிகம் பாடி இறை வழிபாடு செய்தனர்.
இங்கு தரிசனம் செய்ய வருகைதரும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள் மாவட்டத்தில் இருந்து அதிக பக்தர்கள் வந்து தரிசனம் செய்தார்கள் பக்தர்களுக்கு கட்டளைதாரர் ரமேஷ் சர்வேயர் தேனி
சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது .
ஏற்பாடுகளை அன்பர் பணிசெய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் பொருளாளர் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள் செய்து இருந்தார்கள் தை மாதம் 25/1/2024 வியாழக்கிழமை மாலை பெளர்ணமிகிரிவலமும், சிறப்பானஅன்னதானமும் நடைபெறும்