அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலய தைபூச திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

வரலாற்று சிறப்புமிக்க முருகன் ஆலயங்களில் முக்கியமானதும் , புகழ்பெற்ற ஆலயமான திருவாரூர் மாவட்டம் எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் தைபூசத்தை முன்னிட்டு கடந்த 16 ஆம் தேதி் கொடி் ஏற்றத்துடன் துவங்கி தைபூச விழா நடைப்பெற்று வருகிறது.

இவ்விழாவின் 9ஆம் நாளான இன்று அதிகாலை அருள்மிகு சண்முகபெருமானுக்கு வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைப்பெற்று ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மேள தாளங்கள் முழங்க புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.பின்னர் தேரில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன.

தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் தேரினை வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கிவைத்தனர். இதனை தொடர்ந்து திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *