பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியில் 53 வது விளையாட்டு போட்டியின் ஆண்டு விழா…
தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியின் 53 வது விளையாட்டு ஆண்டு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி முனைவர் சேசுராணி மற்றும் கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் குயின்ஸிலி ஜெயந்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக மதுரை ஜேசி குழுமத்தின் செயல் இயக்குனர் ரிஷ்வந்த் கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றினார்.
முன்னதாக கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கீதா அந்துவானேத் வரவேற்புரையாற்றினார்.கோ-கோ, கபடி, ஓட்டப்பந்தயம், டேபிள் டென்னிஸ், வாலிபால், செஸ் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பாளர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
கல்லூரி அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்த கேடயத்தை வணிகவியல் துறை மாணவிகள் பெற்றனர். சுழற்ச்சி கேடயத்தை வணிகவியல் (CA) மாணவிகள் பெற்றனர். கல்லூரி விளையாட்டு வீராங்கனையாக வணிகவியல் (CA) துறை மாணவி பவித்ரா தேர்வு செய்யப்பட்டார்.
கல்லூரி அணிவகுப்பில் ஆங்கிலத்துறை மாணவிகள் முதல் இடத்தையும், தமிழ்த்துறை மாணவிகள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கல்லூரி மாணவி ஆர்த்திகா நன்றி கூறினார்.