அருள்மிகு ஸ்ரீ மரகத தண்டாயுதபாணி திருக்கோயில் தைப்பூச விழா.
செங்கல்பட்டு மாவட்டம்
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள நடுபழனி என அழைக்கப்படும் பெருக்கரணை கிராமத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ மரகத தண்டாயுதபாணி திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் 108 பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி
வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதனை முன்னிட்டு நேற்று காலை
7 மணி அளவில் கலச பூஜைகள், கணபதியாகம், மகா தீபாரதனை செய்து 108 பால் குடம் மற்றும்
பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, சந்தன காவடிகள் ஊர்வலமாக வந்து ஸ்ரீ மரகத தண்டாயுதபாணிக்கு பால் மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டு அதன் பின்னர் ஸ்ரீ மரகத தண்டாயுதபாணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுமகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் மேல்மருவத்தூர், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி
தரிசனம் செய்தனர்.