கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ. முகேஷ்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரியில் உள்ள, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 14-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மற்றும் மாற்றுத்திறன் மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு ரொக்க பரிசு, பாராட்டு சான்றிதல் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
உடன் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சீ.பாபு, தனி வட்டாட்சியர் (தேர்தல்) ஜெய்சங்கர், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் விஜயகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.