பாபநாசத்தில் மாநில அளவிலான சிறுவர்களுக்கான சதுரங்க போட்டி..

30-மாவட்டங்களில் இருந்து 300-சிறுவர், சிறுமியர் பங்கேற்பு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் தனியார் திருமண மண்டபத்தில் சிவஞான முதலியார் நினைவாக பாபநாசம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான சிறுவர்களுக்கான 11-ஆம் ஆண்டு சதுரங்க போட்டி நடைபெற்றது.

இதில் சென்னை, கோயமுத்தூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 30-மாவட்டங்களில் இருந்து 300-சிறுவர், சிறுமியர்கள் சதுரங்க போட்டியில் பங்கேற்றனர்.

9,11,13,17 வயது அடிப்படையில் நடைபெறும் சதுரங்க போட்டியில் வெற்றி பெறும் முதல், இரண்டு மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் நபர்களுக்கு சான்றிதழ்கள் கேடயங்களும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *