மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியரசு தின விழா….

75வது குடியரசு தினத் தினை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி, மக்கள் நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் சிராஜுதீன் தொகுப்புரை வழங்கினார்.

எஸ்.டி.பி. ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தேசிய கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.மேலும் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில தலைவி பாத்திமா கனி உள்ளிட்ட நிர்வாகிகள், டபிள்யூ. – ஐ. எம். எஸ். டி. டி. யூ. தொழிற்சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் கட்சியின் செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்இந்நிகழ்வில் தூய்மை பணியாளர் கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *