சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் ஆலைய தீமிதி திருவிழா. 500 க்கும் மேற்பட்டோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த அருள்மிகு புற்றடி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.இங்கு ஆண்டு தோறும் தைமாதம் தீமிதி திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருவிழாவானது தை மாதம் முதல் வெள்ளி கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.எட்டாம் நாள் விழாவான தீமிதி உற்ச்சவம் நடைபெற்றது.

தீமிதியை முன்னிட்டு 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கங்கனம் கட்டிக்கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள பூக்குழிக்கு அம்மன் எழுந்தருளினார்.அப்போது கோவில் கரகம் எடுத்தவர் பூக்குழியில் இறங்க அவரை தொடர்ந்து 500 க்கும் மேற்பட்டோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

பின்னர் புற்றடி மாரியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் சீர்காழியை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புற்றடி மாரியம்மனை வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *