வலங்கைமான் அருகே ரூபாய் மூன்று கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் திருமலை ராஜன் ஆற்றில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள இனாம் கிளியூர் ஊராட்சி நடு படுகை கிராமத்தையும், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தினையும் இணைக்கும் விதமாக ரூபாய் மூன்று கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் திருமலை ராஜன் ஆற்றில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இனாம் கிளியூர் ஊராட்சி நடுபடுகை கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா பட்டீஸ்வரம் பகுதியில் இருந்து நடுப் படுகை கிராமத்திற்கு செல்லும் விதமாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருமலை ராஜன் ஆற்றில் ரூபாய் மூன்று கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை, தஞ்சாவூர் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கும்பகோணம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவருமான முத்து செல்வம், வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *