ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
எஸ்டிபிஐ கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு கூட்டம்
எஸ்டிபிஐ கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் விலாயத் உசேன் தலைமையில் நேற்று முன்தினம் ஜனவரி 28ஆம் தேதி அன்று நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா கலந்து கொண்டார்
கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் அஜீஸ் துணை தலைவர் அப்துல் லத்தீப், அமைப்பு பொதுச்செயலாளர் உமர் பாரூக், செயலாளர்கள் ஜெமீன் மற்றும் சுல்தான் ஆரூஃபீன் செயற்குழு உறுப்பினர் பாரூக் ஷா மற்றும் எஸ் டி டி யு மாவட்ட தலைவர் முபாரக் விமன் இந்தியா மூமன்ட் மாவட்ட தலைவர் செய்யது பீவி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்
கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன
திருவாரூர் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களில் காவி பாசிசம் ஊடுருவி வருவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வரும் சுழலில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளி கல்வித்துறை உடனடியாக அது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் பள்ளி கல்லூரிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது
தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டது
மேலும் கட்சி வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது