சீர்காழி நகராட்சி பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தரமாக மேற்கொள்ள வேண்டும் என பணிகளை தடுத்து நிறுத்திய குடியிருப்பு வாசிகள். .

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட தாடாளன் கோயில்,ஆசிரியர் நகர், கோனார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை உரிய அளவிலும் தரமாகவும் அமைக்கப்படவில்லை எனவும், சிமெண்ட் சாலை அமைத்த பின் சாலை இருகும் வரை அவ்வழியாக இரு சக்கர வாகனங்கள் பொதுமக்கள் நடந்து செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க தவறியதால் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் சென்று சேதம் அடைந்ததாகவும் கூறி இன்று நடைபெற இருந்த சாலைப் பணிகளை அப்பகுதி பெண்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் தடுத்து நிறுத்தினர்.

மேலும் சேதம் அடைந்த சாலையை சீரமைத்துவிட்டு மேற்கொண்டு சாலை அமைக்கும் பணிகளை தரமாக தொடர வேண்டும் என சாலை பணியில் ஈடுபட வந்த ஊழியர்களிடம் கூறி குடியிருப்பு வாசிகள் பணிகளை தடுத்து நிறுத்தினர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கொண்டு சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *