வளவனூர் அருகே உள்ள வி.அகரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் முக்கால்மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது . விழுப்புரம் வளவனூர் அருகே உள்ள வி. அகரம் கிராமத்தில் பேருந்துகள் நிறுத்தாமல் செல்வது மற்றும் அப்பகுதி மக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் சரிவர வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது

இதனால் வெகுண்டெழுந்த பொதுமக்கள் இன்று காலை 9-00 மணியளவில் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது தகவல் அறிந்த கோலியனூர் இன்ஸ்பெக்டர் நடராஜன் விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதில் சமரசம் அடைந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் முக்கால் மணி நேரம் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *