கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டத்தில் உள்ள புலியரசி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கதிரப்பலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் அருள்மிகு கதிரப்ப லிங்கேஸ்வரர் திருக்கோவில் பிரசாத பந்தல் என்ற புதிதான அன்னதான நிகழ்வு தொடங்கப்பட்டது.
இதன் மூலம் வார வாரம் திங்கட்கிழமை பொதுமக்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த அன்னதான நிகழ்வின் தொடக்கமாக இலவசமாக அன்னதானம், மோர், மற்றும் 200க்கும் மேற்ப்பட்ட தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.